நமது மார்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி : (2697) , முஸ்லிம் (3242)
மார்கத்தில் புதிதாக உருவாகப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித் அத் எனும் அனாச்சாரம் ஆகும்.
ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபி (ஸல்) எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி ) நூல்: நஸயி :(1560)
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரிகள் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடையக்கூடிய மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!
No comments:
Post a Comment